45 கொரோனா மரணங்கள் நேற்று (05) பதிவு

45 கொரோனா மரணங்கள் நேற்று (05) பதிவு

by Bella Dalima 06-07-2021 | 6:59 PM
Colombo (News 1st) COVID -19 தொற்றுக்குள்ளான மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வனைத்து மரணங்களும் நேற்று (05) பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது. 30 ஆண்களும் 15 பெண்களுமே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3, 313 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்று இதுவரையில் 650 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரைய 2,67,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்