ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு COPE அழைப்பு

ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு கோப் குழு அழைப்பு 

by Staff Writer 06-07-2021 | 8:09 AM
Colombo (News 1st) கோப் (COPE) எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இன்று (06) ஆஜராகுமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவையின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை நாளை (07) கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை பிரதிநிதிகளை நாளை மறுதினம் (08) ஆஜராகுமாறு கோப் குழு அழைப்பு விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு கூடவுள்ளது.