மேலும் 4 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

மேலும் 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

by Chandrasekaram Chandravadani 06-07-2021 | 6:47 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் 4 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (06) காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அதனடிப்படையில், யாழ். மாவட்டத்தின் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் கீழுள்ள நாராந்தனை வட மேற்கு தம்பட்டி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை பொலிஸச பிரிவின் உயன்வத்தை மற்றும் உயன் வத்தை வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தின் தொடாங்கொடை பொலிஸ் பிரிவின்  கீழுள்ள புஹாபுகொட கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் மலபடவத்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ஏறாவூர் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (06) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.