பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா 

பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா 

by Staff Writer 06-07-2021 | 11:18 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட (Jayantha Ketagoda), உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். பசில் ராஜபக்ஸவிற்காக சந்தோசத்துடன் தனது பதவியை இராஜினாமா செய்வதாக, ஜயந்த கெட்டகொட தெரிவித்தார்.