தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 343 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 343 பேர் கைது

by Staff Writer 06-07-2021 | 1:37 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட 343 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். நேற்று (05) மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் பயணிகள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு உட்பட்ட விதத்தில் அழைத்துச் செல்லப்படுவதில்லை என்பது கண்றியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் விற்பனை நிலையங்கள், வர்த்தக கட்டடத் தொகுதிகளில் பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் ஒன்றுகூடியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.