இந்திய உயர்ஸ்தானிகர் - தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் சந்திப்பு

by Staff Writer 06-07-2021 | 9:05 PM
Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணி (Tamil Progressive Alliance)  உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று நடைபெற்றது. கொழும்பில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதனிடையே, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton-க்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கம் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று (05) நடைபெற்றது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடனான இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததென Sarah Hulton ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அண்மைக்காலமாக இலங்கையின் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.