Colombo (News 1st) கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக, முப்படைகளுக்குரிய வைத்தியசாலைகளில் இன்று (05) காலை முதல் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தினமும் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோர் தங்களுக்கான Sinopharm தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் பிரதான நிகழ்வு இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.