by Staff Writer 05-07-2021 | 1:44 PM
Colombo (News 1st) எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்குரிய திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (05) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதற்கமைய, எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியினரால் எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.