மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை நீடிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை மேலும் நீடிப்பு 

by Staff Writer 04-07-2021 | 3:29 PM
Colombo (News 1st) தற்போது அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாடுகள் மீதான தளர்வு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையானது, நாளை (05) முதல் 14 நாட்களுக்கு அமுலிலிருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.