புத்தளத்தில் தும்புத் தொழிற்சாலையில் தீ பரவல்

by Staff Writer 03-07-2021 | 6:02 PM
Colombo (News 1st) புத்தளம் - மதுரங்குளி, விருதோடை பகுதியில் உள்ள தும்பு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் இன்று (03) காலை தீ பரவியுள்ளது. பொதுமக்கள், முப்படையினர், புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், தீயணைக்கும் பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பெறுமதியான தும்புகளும் இயந்திரங்கள் பலவும் தீக்கிரையாகியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.