English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
03 Jul, 2021 | 5:20 pm
Colombo (News 1st) திஸ்ஸமஹாராம வாவியில் இடம்பெற்ற தூர்வாரும் நடவடிக்கையினால் தொல்பொருள் மரபுரிமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தின் விசேட குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
திணைக்களத்தின் தென் மாகாண அலுவலகத்தின் குழுவொன்று நேற்று (02) வாவியில் ஆய்வொன்றை மெற்கொண்டதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்தார்.
வாவியை தூர்வாரும் நடவடிக்கையின் போது, தொல்பொருள் மரபுரிமைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை தயாரித்து, வாவியை தூர்வாருவதற்கு அனுமதி வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இந்த விசாரணை அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (05) தமக்கு கிடைக்கவுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சீன – இலங்கை கூட்டுத் திட்டத்தினூடாக திஸ்ஸமஹாராம வாவியின் சேற்று மணலை அகற்றும் நடவடிக்கை சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதி பெறப்படாததால் அந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.
கி.பி 33 – 43 காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வாவி நாட்டின் நீர்ப்பாசன பாரம்பரியத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
10 Jun, 2022 | 10:34 PM
09 Feb, 2022 | 05:40 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS