மதுபான உற்பத்தியை மீள ஆரம்பிக்கவுள்ள W.M.மென்டிஸ் 

W.M.மென்டிஸ் நிறுவனத்திற்கு மதுபான உற்பத்திக்கான அனுமதி மீள வழங்கப்பட்டது

by Staff Writer 02-07-2021 | 8:46 PM
Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமான W.M.மென்டிஸ் நிறுவனத்திற்கு, மதுபானம் தயாரிப்பதற்கான அனுமதியை கலால் வரி திணைக்களம் மீள வழங்கியுள்ளது. கடும் நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டார். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தை செலுத்தத் தவறியமையால், 2018 ஆம் ஆண்டு மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்திக்கான அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டது.