நாட்டில் மேலும் 37 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 37 கொரோனா மரணங்கள் பதிவு

by Staff Writer 02-07-2021 | 8:34 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 37 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மரணங்கள் நேற்று (01) பதிவானவையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 25 ஆண்களும் 12 பெண்களும் அடங்குகின்றனர். இவர்களில் 30 வயதிற்கும் குறைந்த ஆண் ஒருவரும் 30 தொடக்கம் 59 வயதிற்கிடைப்பட்ட 08 பேரும் அடங்குகின்றனர். ஏனைய 28 பேரும் 60 மற்றும் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3,120 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 1,102 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,62,074 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றிலிருந்து 1,701 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,29,541 ஆக அதிகரித்துள்ளது.