இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

இன்று (02) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள, விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

by Staff Writer 02-07-2021 | 2:20 PM
Colombo (News 1st) நாட்டின் 4 மாவட்டங்களில் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (02) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தின் நுகேகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒபேசேகரபுர கிராம உத்தியோகத்தர் பிரிவும், கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெந்தல வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் ஓலந்த கிராமம், ஹெந்தல வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் ரபர்வத்த கிராமமும் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முடுவகல தோட்டத்தின் மேற்பிரிவு மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின் கீழ் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம உத்தியோத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தின் யட்டிஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்ஹேன வீதி, லேக்வியூ வீதி, முதலீட்டு சபை வீதியின் வாவி வீதிக்கு திரும்பும் பகுதி வரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீஹகவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சியம்பலாபெவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் தேவாலய வீதி, ஆரியதாச விதானகே மாவத்தை, சியம்பலாபெவத்த - கந்துபொட வீதி ஆகிய பகுதிகளும், மாத்தளை மாவட்டத்தின் மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமதஓயா கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்