யூனியன் அஷ்யூரன்ஸில் டிஜிட்டல் காப்பீடு

யூனியன் அஷ்யூரன்ஸ் Clicklife உடன் துண்டுப்பிரசுரம் அற்ற டிஜிட்டல் காப்பீடு

by Staff Writer 01-07-2021 | 1:59 PM
நவீன கொள்வனவு அனுபவத்துடன், ஒன்லைன் பாதுகாப்பை வாடிக்கையாளர்கள் தற்போது கொள்வனவு செய்யக்கூடிய வசதியை யூனியன் அஷ்யூரன்ஸ் தனது Clicklife டிஜிட்டல் ஆயுள் காப்புறுதித் தீர்வினூடாக அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக 100 வீத கடதாசி பாவனையற்ற, பொருத்தமான காப்புறுதித் தீர்வை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும். நாளொன்றுக்கு 23 ரூபா செலுத்தி, 4 மில்லியன் ரூபா வரையான பாதுகாப்பை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக வாழ்க்கை பொருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், அன்புக்குரியவர்களை பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையும் உலகளாவிய ரீதியில் அதிகரித்த வண்ணமுள்ளது. நடமாடல் கட்டுப்பாடுகள், நேரடியான தொடர்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நுகர்வோருக்கு அவசியமான பாதுகாப்பை பெற்றுக் கொள்வது போன்ற சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. Clicklife ஊடாக நுகர்வோருக்கு முகவர்களை சந்திக்க வேண்டிய தேவை இல்லை என்பதுடன், படிவங்களை நிரப்புவது அல்லது மருத்துவ ஆவணங்களை வழங்குவது போன்றவற்றுக்கான தேவை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் காப்புறுதியை கொள்வனவு செய்வதற்கான புதுவித அனுபவமாக இது அமைந்துள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் மேற்கொண்டுள்ள இந்த ஏற்பாடுகள் தொடர்பில் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “ஆயுள் காப்புறுதியில் நாம் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். பாரம்பரிய முறைகள், கடதாசி பாவனை மற்றும் நேரடி சந்திப்புகள் போன்றவற்றை இல்லாமல் செய்து, பாதுகாப்பை கொள்வனவு செய்யும் செயன்முறையை எளிமைப்படுத்தியுள்ளோம். Clicklife இனால் டிஜிட்டல் முறையில் இலங்கையர்களின் கனவுகளை பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதிக்கு பொருத்தமான வகையில் இந்தத் தீர்வுகள் அமைந்துள்ளன. வாடிக்கையாளர்களை மையப்படுத்திய எமது பயணத்தில், தற்போதைய தேவையை நிவர்த்தி செய்வது பற்றி நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இதனூடாக இலங்கையின் எப்பகுதியிலுமிருந்து, கடதாசி பாவனையற்ற தீர்வை கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு எளிமையான மற்றும் வினைத்திறன் வாய்ந்த தீர்வை முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்” என்றார். இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் தொற்றுப் பரவல் அதிகரித்துச் செல்லும் நிலையில், பாதுகாப்பு என்பது எதிர்காலத்துக்காக தயார்படுத்திக் கொள்ளவும் அன்புக்குரியவர்களுக்காக ஆதரவை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது. பொருத்தமான வகையில் நாளொன்றுக்கு 23 ரூபா எனும் அடிப்படையில் இந்த தீர்வு ஆரம்பிப்பதுடன், மரணம் சம்பவித்தால் 2 மில்லியன் ரூபாயை வழங்குவதுடன், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக உயிரிழந்தால் 3 மில்லியன் ரூபாவையும் விபத்து காரணமாக உயிரிழந்தால் 4 மில்லியன் ரூபாவையும் நஷ்டஈடாக வழங்கும் வகையில் அமைந்துள்ளது. கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் 03 தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2021 மே மாதத்தில், சந்தை மூலதனவாக்கமாக ரூ. 18.2 பில்லியனையும் ஆயுள் நிதியமாக ரூ. 45 பில்லியனைத் தன்வசம் கொண்டுள்ளதுடன், மூலதன போதுமை விகிதம் (CAR) 313 வீதமாகவும் காணப்பட்டது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. 76 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 3000 இற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்குவதுடன், தொடர்ச்சியாக ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, ஆயுள் காப்புறுதித் துறையில் எழும் மாற்றங்களுக்கேற்ப பணியாற்றிய வண்ணமுள்ளது.