by Staff Writer 01-07-2021 | 10:31 AM
Colombo (News 1st) யாழ். தென்மராட்சி - மீசாலை A9 வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸாரின் பஸ் மீது டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு (30) 9.10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டிப்பர் மோதியதில் பொலிஸாரின் பஸ், அருகிலிருந்த கடைத்தொகுதிக்குள் புகுந்ததோடு தென்மராட்சி பகுதிக்கான பிரதான மின் கம்பத்துடனும் மோதியுள்ளது.
இதன் காரணமாக தென்மராட்சி பிரதேசத்தின் பல பகுதிகளுக்கான மின்சாரம் நேற்றிரவு முதல் இன்று (01) அதிகாலை வரை தடைப்பட்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.