முந்தலில் உயிரிழந்த கடலாமை கரையொதுங்கியது

by Staff Writer 30-06-2021 | 1:59 PM
Colombo (News 1st) புத்தளம் - முந்தல், பெரியபாடு கடற்கரையோரத்தில் உருக்குலைந்த நிலையில் கடலாமையொன்று நேற்றிரவு (29) கரையொதுங்கியுள்ளது. சுமார் இரண்டடி நீளமான கடலாமை, சுமார் 15 கிலோகிராம் எடையுடையது என மதிப்பிடப்பட்டுள்ளது. கடலாமை கரையொதுங்கியமை குறித்து வனஜீவராசிகள் திணைக்கள ஆனைவிழுந்தான் வலய பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்ததையத்து, அங்கு வருகை தந்த அதிகாரிகள் மேலதிக பரிசோதனைக்காக அதனை கொண்டுசென்றுள்ளனர். புத்தளம் மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் இதுவரை 37 கடலாமைகளும் 04 டொல்பின்களும் ஒரு திமிங்கிலமும் கரை ஒதுங்கியுள்ளன. நீதிவான்களின் உத்தரவின் பேரில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அவற்றை நிக்கவரட்டிய வனஜீவராசித் திணைக்களத்தின் மிருக வைத்தியசாலையில் ஒப்படைக்கவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.