நாட்டில் மேலும் 47 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 47 கொரோனா மரணங்கள்

by Staff Writer 30-06-2021 | 8:39 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 47 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த மரணங்கள் நேற்று (30) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 31 பெண்களும் 16 ஆண்களும் அடங்குகின்றனர். இவர்களில் 30 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட 12 பேரும் 60 வயதிற்கு மேற்பட்ட 34 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. இதனிடையே, இன்று இதுவரையில் 1,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,58,405 ஆக அதிகரித்துள்ளது. 2,481 பேர் இன்று தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,25,952 ஆக அதிகரித்துள்ளது.