தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சிறு கட்சிகள் கலந்துரையாடல்

by Staff Writer 30-06-2021 | 8:13 PM
Colombo (News 1st) தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பில் சிறிய கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் கொழும்பில் இன்று (30) நடைபெற்றுள்ளது. 15 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாட்டை பாராளுமன்ற தெரிவுக்குழு கோரியுள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இன்று நடைபெற்றுள்ளது. கொழும்பில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் குறித்த கட்சிகளின் தலைவர்களும் சில உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.