திருமண நிகழ்வை நடத்தியோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

திருமண நிகழ்வை நடத்திய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

by Staff Writer 30-06-2021 | 9:32 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, பாணந்துறை - பல்லேமுல்ல பகுதியில் திருமண நிகழ்வொன்றை நடத்திய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 12 ஆண்களும் 8 பெண்களும் அடங்குகின்றனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி திருமண நிகழ்வொன்று இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.