மத்தா எனப்படும் மதுஷங்க சில்வா கைக்குண்டுடன் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்பு: மத்தா எனப்படும் மதுஷங்க சில்வா கைக்குண்டுடன் கைது

by Staff Writer 30-06-2021 | 4:03 PM
Colombo (News 1st) பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினரான 'மத்தா' என்றழைக்கப்படும் மதுஷங்க சில்வா கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 22 வயதான குறித்த நபர் கல்கிசை - கல்தேமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயிலுள்ள 'அஞ்சு' என்றழைக்கப்படும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உதவியாளராக இவர் செயற்படுகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மொரட்டுமுல்லயில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுடன் இவர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இதேவேளை, கம்பஹா - வீதியவத்தயில் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபரால் புதைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கியின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. மினுவாங்கொடை - உன்னராவயில் துப்பாக்கியின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. 36 வயதான சந்தேகநபர் பல பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஏனைய செய்திகள்