இன்று (30) தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

இன்று (30) தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 30-06-2021 | 8:47 AM
Colombo (News 1st) நான்கு மாவட்டங்களின் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (30) காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி, ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அதனடிப்படையில், மொனராகலை மாவட்டத்தின் பிபில பொலிஸ் பிரிவின் கனுல்வெலெ கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்லவ கிராம உத்தியோகத்தர் பிரிவின் நியதுருபொல இலக்கம் 1,2,3, மற்றும் 4 ஆகிய தோட்டங்களும் தெஹியோவிட்டை பொலிஸ் பிரிவின் கன்னகம கிராம உத்தியோகத்தர் பிரிவின் தெவலகந்த தோட்டமும் கொடம்பல கிராம உத்தியோகத்தர் பிரிவின் பம்பேகம தோட்டமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட பொலிஸ் பிரிவின் எலதூவ கிராம உத்தியோகத்தர் பிரிவின் எலதூவ தோட்டம் முடக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பொலிஸ் பிரிவின் பழைய கொலனி கிராம உத்தியோகத்தர் பிரிவின் திவித்துர தோட்டமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.