by Staff Writer 30-06-2021 | 5:08 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வாள்வெட்டு சம்பவங்கள் நேற்று (29) பதிவாகியுள்ளன.
யாழ்ப்பாணம் - கொக்குவிலில் உள்ள இரண்டு வீடுகளில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கொக்குவில் மேற்கு வராஹி அம்மன் கோவிலடி பகுதியில் நேற்று மாலை வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வீட்டுத் தளபாடங்கள், மோட்டார் சைக்கிள்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
இதனிடையே, பூநாரி மடத்தடியில் உள்ள வீடொன்றிலும் நேற்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு வாள்வெட்டு சம்பவங்களும் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றவை என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.