வாகன விபத்து; 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழப்பு

வாகன விபத்து; 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழப்பு

by Staff Writer 29-06-2021 | 3:24 PM
Colombo (News 1st) இன்று (29) காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவற்றில் 08 மரணங்கள் நேற்று (28) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து சிகிச்சை பெற்ற 04 பேரும் நேற்று உயிரிழந்துள்ளனர். நேற்று உயிரிழந்த 08 பேரும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். நாளாந்தம் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.