ஆறு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வர தடை 

by Staff Writer 29-06-2021 | 1:57 PM
Colombo (News 1st) ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மத்திய கிழக்கிலுள்ள 06 நாடுகளிலிருந்து வருகைதரும் விமானப் பயணிகள் இலங்கையில் தரையிறங்க அனுமதிக்க வேண்டாம் என அனைத்து விமான சேவைகளுக்கும் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து வருவோருக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜூலை மாதம் முதலாம் திகதி நள்ளிரவில் இருந்து ஜூலை மாதம் 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை குறித்த நாடுகளிலிருந்து எந்தவொரு நபரும் இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கையூடாக வேறு நாடுகளுக்கு பயணிக்கும் குறித்த மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை மேலும் தெரிவித்தது.