சிறுத்தை இறைச்சி விற்பனை; கைதான மூவருக்கும் பிணை 

வலப்பனையில் சிறுத்தை இறைச்சியை விற்ற குற்றச்சாட்டில் கைதான மூவருக்கும் பிணை 

by Staff Writer 28-06-2021 | 6:16 PM
Colombo (News 1st) வலப்பனையில் சிறுத்தை இறைச்சியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறுத்தை ஒன்றை பொறிவைத்து பிடித்து அதனை கொன்று இறைச்சியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் வலப்பனை - மூர் ஓயா தோட்டத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்களில் ஒருவர், சிறுத்தையின் புகைப்படத்தை தனது மற்றுமொரு நண்பருக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியுள்ளார். இந்த புகைப்படம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்தினால் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 07 ஆம் திகதி இடம்பெறுமென வலப்பனை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.