போலி காசோலை மோசடி தொடர்பில் மற்றொருவர் கைது

போலி காசோலை மோசடி தொடர்பில் மற்றொருவர் கைது

by Staff Writer 28-06-2021 | 7:03 PM
Colombo (News 1st) போலி காசோலையை சமர்ப்பித்து தனியார் வங்கியொன்றில் பணம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த சந்தேகநபர், கிரிபத்கொடை வங்கியொன்றில் போலி காசோலையை சமர்ப்பித்து 130 இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு போலி காசோலைகளை சமர்ப்பித்து வங்கிகளில் பணம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் வங்கி அதிகாரி ஒருவர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 6 பேர் முன்னர் கைது செய்யப்பட்டனர். இதனூடாக சந்தேகநபர்கள் 430 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வணிக மற்றும் நிதிப்பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.