24 மணி நேரத்தில் 428 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 428 பேர் கைது

by Staff Writer 28-06-2021 | 3:33 PM
Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 428 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகளவானோர் கண்டி பிரதேசத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இதேவேளை, அரச அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், வர்த்தக கட்டடத் தொகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுகின்றவா என்பது தொடர்பில் இன்று (28) தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.