கொரோனா பிறழ்வு தொடர்பில் மற்றுமொரு ஆய்வு ஆரம்பம் 

கொரோனா பிறழ்வு தொடர்பில் மற்றுமொரு ஆய்வு ஆரம்பம் 

by Staff Writer 28-06-2021 | 2:19 PM
Colombo (News 1st) டெல்டா உள்ளிட்ட கொரோனா பிறழ்வுகளின் பரவலினால் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக மற்றுமொரு பரிசோதனை இன்று (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் மாதிரிகளை சேகரிப்பதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார். நூற்றுக்கும் அதிகமான மாதிரிகளைக் கொண்டு ஆய்வை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஏழு நாட்களுக்குள் குறித்த பரிசோதனை அறிக்கையை வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.