தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவன சேவைகள் ஆரம்பம்

E-Channeling மூலம் நேரம் ஒதுக்கிக்கொண்டவர்களுக்கு மாத்திரம் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் மீள ஆரம்பம்

by Staff Writer 27-06-2021 | 3:42 PM
Colombo (News 1st) தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் நாளை (28) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. E - Channeling ஊடாக நேரம் ஒதுக்கிக்கொண்டவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சவிந்திர கமகே தெரிவித்தார். எனினும் வேரஹெர, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் களுத்துறை கிளைகளின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கிளைகளில் நேரம் ஒதுக்கிக்கொண்டவர்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்