கொரோனா தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த திட்டம்

தொழில் நிமித்தம் வௌிநாடு செல்வோருக்கு தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த நடவடிக்கை 

by Staff Writer 27-06-2021 | 2:23 PM
Colombo (News 1st) நாட்டில் இருந்து புறப்படும் வௌிநாட்டு பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார். இதற்கிணங்க வௌிநாடுகளுக்குச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ள தொழிலாளர்களுக்கு, குறித்த நாடுகளினால் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், நாட்டில் Sinopharm தடுப்பூசி காணப்படுவதால் அதனை பரிந்துரை செய்யும் நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.