கரவெட்டியில் சேதனப் பசளை உற்பத்தி நிலையம் திறப்பு

கரவெட்டியில் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார் நாமல்

by Staff Writer 27-06-2021 | 7:57 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நாமல் ராஜபக்ஸ வடமராட்சி - கரவெட்டி பிரதேசத்தில் இயந்திரவியல்சார் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தை இன்று திறந்து வைத்தார். ஒன்பது மாகாணங்களில் அரசின் தேசிய கொள்கையின் பிரகாரம் கழிவுப்பொருட்களை சேதனப் பசளையாக்கும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக யாழ். வடமராட்சியின் கரவெட்டி பிரதேச சபையின் முள்ளி பகுதியில் இன்று அமைச்சரினால் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் வட மாகாண ஆளுநர், யாழ். அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் தமது தந்தையை விடுவிக்கக் கோரி அமைச்சர் நாமல் ராஜபக்ஸவிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்தனர்.