திருமலையில் திருட்டு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

திருகோணமலையில் திருட்டு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

by Staff Writer 27-06-2021 | 2:20 PM
Colombo (News 1st) திருகோணமலை - மஹதிவுல்வெவ பகுதியில் வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடிய பொருட்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஹதிவுல்வெவ -சுவர்ண ஜெயந்திபுர பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருடிய பொருட்களை கொள்வனவு செய்த அதே பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 51 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று (27) திருகோணமலை மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.