மேலும் 43 கொரோனா மரணங்கள்

மேலும் 43 கொரோனா மரணங்கள்

by Staff Writer 26-06-2021 | 7:51 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 43 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த மரணங்கள் நேற்றைய தினம் (25) பதிவானவை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 25 ஆண்களும் 18 பெண்களும் அடங்குகின்றனர். இவர்களில் 30 வயதுக்கு குறைந்த ஆண் ஒருவரும் 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்ட 07 பேரும் அடங்குகின்றனர். ஏனைய 35 பேரும் 60 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களென அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2905 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.