இரு குழுக்களிடையே மோதல்; 09 பேர் காயம்

மஹகந்த அப்லேண்ட் தோட்டத்தில் இரு குழுக்களிடையே மோதல்; 09 பேர் காயம்

by Staff Writer 26-06-2021 | 7:38 PM
Colombo (News 1st) கண்டி - மஹகந்த அப்லேண்ட் தோட்டத்தில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 09 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு (25) இடம்பெற்றுள்ளது. முன்பகை காரணமாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த 09 பேரும் கண்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இதனிடையே, மோதலுடன் தொடர்புடைய 04 சந்தேகநபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.