இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

by Staff Writer 26-06-2021 | 9:27 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல பொலிஸ் பிரிவின் ஹிம்புல்ஓய மற்றும் மஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவின் தெல்பெவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் கேகாலை - ஹெலமட கிராம உத்தியோகத்தர் பிரிவும் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் கிரிபத்கொட - நாஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று அதிகாலை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.