10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தல்

by Bella Dalima 25-06-2021 | 9:21 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம், மன்னார், பதுளை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில், யாழ். மாவட்டத்தின் கரவெட்டி பொலிஸ் பிரிவின் கரனவாய் கிராம உத்தியோகத்தர் பிரிவும், மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலைமன்னார் பியர் மேற்கு, தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், பதுளை மாவட்டத்தின் வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹூலங்கபொல கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்தகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் நொரகல்லவத்த மேல் பிரிவு, பனாவென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவின் பெல்மடுல்ல தோட்டத்தின் முதலாம் பிரிவு, பனாவென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவின் பெல்மடுல்ல தோட்டத்தின் 5 ஆம் இலக்க பிரிவு, கபுஹென்தொட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவின் பெல்மடுல்ல தோட்டத்தின் 5 ஆம் இலக்க பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பொலிஸ் பிரிவின் யட்டதொல கிராம உத்தியோகத்தர் பிரிவின் அம்பத்தென்னவத்த பிரதான பிரிவு மற்றும் க்ளே பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு மாவட்டத்தின் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் 233 ஆம் இலக்க தோட்டம் மற்றும் மஹவத்த வீதி ஆகியன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.