மா ஓயாவில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு 

மா ஓயாவில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு 

by Staff Writer 25-06-2021 | 9:00 PM
Colombo (News 1st) கேகாலை - பொலகொட பகுதியில், மா ஓயாவில் மூழ்கி 09 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேநேரம் 05 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். காணாமல் போயுள்ள சிறுமியை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். இன்று (25) பிற்பகல் 1.30 மணியளவில் தமது தந்தையுடன் நீராடச் சென்றிருந்த நேரத்தில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.