திருச்சியில் மட்டக்களப்பை சேர்ந்தவர் உயிரிழப்பு

திருச்சி சிறப்பு முகாமில் மட்டக்களப்பை சேர்ந்தவர் உயிரிழப்பு

by Bella Dalima 25-06-2021 | 3:49 PM
Colombo (News 1st) தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் நேற்று (24) உயிரிழந்துள்ளார். திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 78 பேர் உள்ளிட்ட சுமார் நூறு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தம்மை விடுவிக்கக் கோரி இவர்கள் தொடர்ச்சியாக 16 நாட்களாக சாத்வீகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மட்டக்களப்பை சேர்ந்த 52 வயதான நபர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திடீர் சுகயீனம் காரணமாக திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தமிழகத்தின் கே.கே நகர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.