உர இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்

சேதன மற்றும் இரசாயன உரங்கள் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்

by Bella Dalima 25-06-2021 | 11:59 AM
Colombo (News 1st) சேதன மற்றும் இரசாயன உரங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் விவசாயிகள் சேதன உர உற்பத்தியில் கவனம் செலுத்துவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் ​கலாநிதி M.W.வீரக்கோன் தெரிவித்தார். எவ்வாறாயினும், நாட்டிற்கு தேவையான சேதன பசளையை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.