செப்டம்பருக்குள் 13 மில்லியன் பேருக்கு தடுப்பூசி

செப்டம்பர் இறுதிக்குள் 13 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் - ஜனாதிபதி 

by Staff Writer 25-06-2021 | 10:14 PM
Colombo (News 1st) எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நாட்டின் சனத்தொகையில் 13 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய விசேட உரையிலே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.