நோயாளர்கள் அதிகரித்தால் கட்டுப்பாடு கடுமையாகும்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படும்: அசேல குணவர்தன

by Bella Dalima 25-06-2021 | 10:15 AM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமாயின், பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார். இதனால் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அவசியமின்றி வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம் என அவர் மக்களை வலியுறுத்தினார். இயலுமானவரை வீடுகளிலிருந்து பணிபுரியுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டார். இதேவேளை, பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடும் என அவர் எதிர்வுகூறினார்.