மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

by Chandrasekaram Chandravadani 24-06-2021 | 8:22 AM
Colombo (News 1st) மூன்று மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (24) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அதனடிப்படையில் யாழ். மாவட்டத்தின் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெக்லமேஷன் மேற்கு மற்றும் குருநகர் வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவின் மஞ்சந்தொடுவாய் கிராம சேவகர் பிரிவு மற்றும் மண்முனை பொலிஸ் பிரவிற்குட்பட்ட மாமாங்கம் கிராம சேகவர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் பொலிஸ் பிரிவின் இலுப்புகெதர கிராம சேவகர் பிரிவின் வில்கொட கிராமம் மற்றும் ரஷ்நாயக்கபுர பொலிஸ் பிரிவின் கணுகெட்டிய கிராம சேவகர் பிரிவின் கணுகெட்டிய கிராமம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.