உணவு தவிர்ப்பு போராட்டத்தில் சிறைக் கைதிகள் 

மஹர, வெலிக்கடை சிறைகளிலுள்ள மரண தண்டனை கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்

by Staff Writer 24-06-2021 | 5:59 PM
Colombo (News 1st) மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளிலுள்ள சில கைதிகள் இன்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சில கைதிகளும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். தங்களுக்கான மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக தளர்த்துமாறு கோரி கைதிகள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.