டெல்டா  கொரோனாவால் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல்

டெல்டா வகை கொரோனாவால் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா

by Bella Dalima 24-06-2021 | 3:52 PM
Colombo (News 1st) இந்தியாவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனாவால் அமெரிக்கா மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு கொரோனா தடுப்புக் குழு தலைவா் அந்தோனி ஃபாசி (Dr. Anthony Fauci) தெரிவித்துள்ளாா். அமெரிக்காவில் புதிதாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களில் 20 சதவீதத்தினருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனை போலவே அமெரிக்காவிற்கும் இதனால் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவை வீழ்த்துவதற்கான போராட்டத்தில் மிக வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா பின்னடைவை ஏற்படுத்தும். எனினும், அந்த வகை கொரோனாவிற்கு எதிராக அமெரிக்காவில் செலுத்தப்படும் தடுப்பூசிகள் சிறப்பாக செயற்படுவது திருப்தியளிக்கிறது. இதன் மூலம், நம்மிடம் உள்ள வசதியைப் பயன்படுத்தி டெல்டா கொரோனாவை வீழ்த்த வேண்டும் என்பது தெளிவாகிறது
என அந்தோனி ஃபாசி குறிப்பிட்டுள்ளார்.