கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,749 ஆக அதிகரிப்பு 

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,749 ஆக அதிகரிப்பு 

by Staff Writer 24-06-2021 | 8:38 PM
Colombo (News 1st) நாட்டில் நேற்று 45 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,749 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, இன்று 1,228 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, நாட்டில் COVID தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,47,319 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்று 1,639 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,12,825 ஆக பதிவாகியுள்ளது.