2,093 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

2,093 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 23-06-2021 | 10:22 AM
Colombo (News 1st) இன்று (23) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2,093 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. கொழும்பு மாவட்டத்தில் 322 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 364 பேரும் யாழ். மாவட்டத்தில் 78 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 55 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 19 நபர்களும் பதுளை மாவட்டத்தில் 41 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 136 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 09 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐவரும் திருகோணமலை மாவட்டத்தில் 40 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 22 பேரும் வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் இருவரும் தொற்றாளர்களாகப் பதிவாகியுள்ளனர். இதனிடையே, நேற்றைய தினம் (22) 71 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,704 ஆக அதிகரித்துள்ளது.  

ஏனைய செய்திகள்