by Staff Writer 23-06-2021 | 1:30 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 433 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய பகுதியிலேயே அதிகளவானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 42,347 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.