by Staff Writer 23-06-2021 | 12:23 PM
Colombo (News 1st) இன்றிரவு (23) 10 மணி முதல் நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை மறுதினம் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் (24)முழுமையாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தேவையற்ற வகையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.