2,131 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

2,131 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 22-06-2021 | 11:25 AM
Colombo (News 1st) இன்று (22) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2,131 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 271 நபர்களும் கொழும்பு மாவட்டத்தில் 229 பேரும் கண்டி மாவட்டத்தில் 103 பேரும் யாழ். மாவட்டத்தில் 75 நபர்களும் புத்தளம் மாவட்டத்தில் 118 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 21 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 79 நபர்களும் பதுளை மாவட்டத்தில் மூவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 177 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 20 நபர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவரும் திருகோணமலை மாவட்டத்தில் 66 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 26 பேரும் வவுனியா மாவட்டத்தில் 26 நபர்களும் மன்னார் மாவட்டத்தில் 17 நபர்களும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.   இதனிடையே நேற்றைய தினம் (21) 52 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்பிரகாரம் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2633 ஆக அதிகரித்துள்ளது. இதன்பிரகாரம், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,633 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.